கற்களுக்கு உயிர் கொடுத்து கடவுள் போற்றும் மனிதா!
நீ உணர்விழந்து கல்லாய்ப்போனதை உன் கடவுள் போற்றுமோ?
இங்கே அமைதியென்பது கடவுள் போலில்லா மாயமோ?
அல்லது, சுரண்டப்படும் மனிதம் ஒருங்கிணைந்தால் உருவாகும் மாற்றமோ?
இனி ஒடுக்கப்பட்ட, உரிமையிழந்த வர்க்கம் புதுச் சரிதம் எழுதத்தொடங்குமோ?
இல்லை சதை எரிந்து, உருவழிந்த பிண்டங்கள், முகம் இழந்து போவது ஒரு தொடர்கதையாய் விடுமோ?
- சஜித் அட்டேபுரம்

sema...
ReplyDelete